மத்தியப் பிரதேசத்தில் மோகம் யாதவ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்த 2-ஆம் நாளிலே புல்டோசர் அச்சுறுத்தல் தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலைவர் தேவேந்திர சிங் தாக்கூர் தாக்கப்பட்ட விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகள் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கிவிட்டு, பின்னர் அவர்களின் வீடுகள் சட்டவிரோதமான இடத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறியது அம்மாநில பா.ஜ.க அரசு.
முன்னதாக திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்த 10 கடைகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. அதேபோல், வழிபாட்டு தளங்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் வைக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.